Monday, January 11, 2010

இன்பத்துள் இன்பமா? துன்பத்துள் துன்பமா?

உன்னைப் பார்த்து முதன்முதலாய்
வெட்கம் வந்தபோது
காதல் வந்ததை உணர்ந்தேன்!

உன்னிடம் காதலைச் சொல்ல வந்தாலோ
மறுபடி வெட்கம்தான் வருகிறது!

இன்பத்துள் இன்பமா?
துன்பத்துள் துன்பமா?
காதல்.

காதலின்பம் – மலை.
பிரிவுத்துயர் – கடல்.
அதிகமெது,
உயரமா? ஆழமா?

No comments:

Post a Comment